இடுகைகள்

2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
          தீ           •• வெண்மணியில் தியாகிகள் இன்னும் இந்தியாவில் அடிமைகள் ஞாபகமிருக்கிறதா நாற்பத்து நான்கு உயிர்கள்? ஞாபகமிருக்கிறதா தஞ்சை ராமையாவின் குடிசை? ஞாபகமிருக்கிறதா சாணிப்பால் சவுக்கடி வாழைமட்டையில் தண்ணீர் ஞாபகமிருக்கிறதா கையில் செருப்பு இடுப்பில் துண்டு, ஞாபகமிருக்கிறதா எப்போதும் கைகட்டல் இரட்டை டம்ளர் வெண்மணியில் தியாகிகள் இன்னும் இந்தியாவில் அடிமைகள் மாற்றுத்திறனாளிகள் மன்னிப்பீர்…. இது இடஒதுக்கீட்டுக்காக ஏங்கும் ஊனமுற்றோருக்கான உழவுதேசம். ஆனால் ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் செவிடர் தேகம். பிராணி வளர்ப்போர் சங்கம் பிழை பொறுத்தருள்வீர்… கேவலம் நாய்க்கும் தன் வால் நிமிர்த்தாத தன்மானம் இருக்கிறது மனிதர்கள்தாம் குனிந்து கிடக்கிறார்கள். இழிவு  இழிவு இழிவு மறதி தேசத்தில் வரலாற்றுப்பிழைகளே வாரிசுகள். மறதி தேசத்தில் எதிர்காலம் எப்போதும் இருண்டகாலம். மறதி தேசத்தில் நெளியாத புழுக்களாய் மனிதர்கள். மறதி தேசத்தில் கடலின் தீபகற்பமல்ல கண்ணீரின் தீவு இழிவு  இழ
பிடல் காஸ்ட்ரோவைப் பின்தொடரும் குரல் •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• ஒரு சதுரங்கத்தின் சாயுங்காலம் ராஜா ராணி யானை குதிரை சிப்பாய் ஒட்டுமொத்தமாக வெட்டப்படுகிற வேளையில்… அசரீரியாய் ஒலிக்கிறோம் ஆட்ட நாயக அகங்கார ஓங்காரங்கள். நாளை வேறு விளையாட்டாகலாம் அன்றிப் புதிய சதுரங்கம் புகுத்தப்படலாம் ஆடுபொருள்களே மாற்றப்படலாம் சிலர் விளையாடத் தகுதியற்றவர் என்று விதிகள் வரலாம் எதுவும் சாத்தியம்…எங்கள் விளையாட்டை யாரறிவார்? கணிக்கமுடியாத நிதியின் காட்டாற்று நடனத்தில் எக்காளமிடும் எங்கள் கடவுளின்முன் நிகழ்த்தப்படும் எந்திர தந்திர காலகால கணினி பூஜைகள் மானுடம்…மானுடம்…மானுடம்… யாருக்கு வேண்டும் உங்கள் திரிபுகளைச் சுமந்தலையும் தேய்ந்த ரிகார்ட் வாசகங்கள்? ஒவ்வொரு வார்த்தையிலும் எங்கள் ஊத்தை மெருகேறிய பற்களின் எனாமல்கள். பொழுதுபோக்குப் பொம்மலாட்டங்களில் மரணக்கயிறுகளில் தொங்கும் மரப்பாச்சி பொம்மைகள் மேடையில் நிகழ்த்தப்படும் மரியாதைக்குரிய ஓநாய்களின் கண்ணீர் நெசவுகளைக் கண்டடையும் நுட்பம் கைவரப்போவதில்லை
பெருஞ்சோகக் குமிழி •••••••••••••••••••••••••••••• அகன்று பரந்து விரிந்த ஆலமரம் போன்ற வேம்பினடியில் இலைகளையெல்லாம் எண்ணிமுடித்து அலைபேசி வழியே சில பல சுயபடங்கள் சுட்டு முடித்து நாலைந்து நாழிகைகளே முடிந்திருக்கும் அதற்குள் எப்படியும் வந்துவிடுவான் காதலனென ஏதேதோ எண்ணிக்கிடந்தாள். பக்கத்தில் .ஓடியும் ஓடாமலும் தேங்கிக் கிடந்தது நகரின் பாவமென நலிந்த நதி கூவம் வழியெங்கும் பொருக்குப் பொருக்காய்க் காய்ந்து ஏடாகியிருந்தன நாலைந்து நாட்களான நரகல் கொத்துகள் இங்கொன்றும் அங்கொன்றுமாய் ஈர மூத்திரத் திட்டுகள் இதையெல்லாம் தாண்டி எப்படியும் வந்துவிடுவான் இருசக்கர எந்திரத் தேரேறி எந்த நேரத்திலுமென்று  எதிர்பார்ப்பை வழி நெடுக மலர்களென தூவி இன்னுமவள் காத்திருந்தாள். வேலையில்லாக்காரணங்காட்டியும் ஊதாரித்தனமும் உல்லாசமுமாய் உலாவித்திரியும் சோம்பல் கனவின் சுகவாசியென ஊரில் பலர் அலர்மொழி உரைத்தது சொல்லியும் எதிர்த்த வீட்டாருக்கென்ன தெரியுமென எற்றி இகழ்ந்த தடிப்பேறிய தனது பேச்சுகளே மரத்தைச் சுற்றிச்சுற்றியோடின அவளின் மரத்துப்போன மலரும் நினைவுகளாய்… மறக்க
வெள்ளைத்தாமரை ***************************** கூட்டத்தின் கடைசி வரிசையில் ஏதோ சலசலப்பு. காரணம் புரியாமல் மலங்க மலங்க விழித்துக்கொண்டிருந்தேன். ஐந்தாறு பேர்களைச் சமாதானப்படுத்திவிட்டு வந்த ஆசிரியர் ஒருவர் சொன்னபோதுதான் எனக்குக் காரணம் புரிய ஆரம்பித்தது நான் ஒன்பதாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் பள்ளியில் சரஸ்வதி பூஜையையொட்டி ஒரு கலைவிழா நடந்தது.  அந்தப் பள்ளியின் மாணவப்பேச்சாளனாக இருந்ததால் ஆசிரியர்கள் எனக்குப் பேச வாய்ப்பளித்திருந்தனர். அன்றைய எனது பேச்சின் மையக்கருத்து மகாகவி பாரதியின் வெள்ளைத்தாமரை கவிதையாக இருந்தது. ”மந்திரத்தை முணுமுணுத்து ஏட்டை வரிசையாக அடுக்கி அதன்மேல் சந்தனத்தை மலரை இடுவோர் சாத்திரம் இவள் பூசனை அன்றாம். வீடுதோறும் கலையின் விளக்கம் வீதிதோறும் இரண்டொரு பள்ளி நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள் நகர்களெங்கும் பலப்பல பள்ளி தேடுகல்வி இலாததொரு ஊரைத் தீயினுக்கிரையாக மடுத்தல் கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்” கலைமகளை பூஜை செய்வதன் அர்த்தம் கல்வியைப் பூஜை செய்ய வேண்டும் என்பது மகாகவியின் கருத்து. வெறும் புத்
காதலிக்கும் காதல்                        ••••••••••••••••••••••••••• அன்னா தஸ்தயேவ்ஸ்கியின் ”நினைவுக்குறிப்புகள்” வாசித்து முடித்த இந்தத்தருணத்தில் நான் உணர்ச்சிகளின் கொந்தளிப்பால் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறேன் என்றுதான் என்னால் சொல்லமுடியும். இந்த நொடியில் எனக்கு இப்படித்தான் சொல்லத்தோன்றுகிறது.  அன்னா தஸ்தயேவ்ஸ்கி என்னுடைய இலக்கியத் தாயாகி விட்டாள். இந்தப் புத்தகத்தை வாசிக்காதவர்களுக்கு ஓர் வேண்டுகோள்….இந்த மேற்கோள் வரிகளை ஒருமுறைப் படியுங்கள். ”….அன்னா, அந்த ஓவியன் நான்தான் என்று நினைத்துக்கொள்… நான் உன்னிடம் என் காதலைச் சொல்லவும் செய்கிறேன் எனில், நீ வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருப்பாயா?  சொல்… உன் பதில் என்னவாக இருக்கும்?...” இந்த வாசகத்தை இப்போது வாசித்துவிட்டீர்கள் அல்லவா?...அந்தப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்குங்கள்.  யூமா.வாசுகி அவர்களின் மொழிபெயர்ப்பில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள அந்து நூலின் எழுபத்தோராம் பக்கத்தில் மீண்டும் மேற்குறித்த வாசகங்களை நீங்கள் கடக்கிறபோது திணறிப்போவீர்கள் என்பது உறுதி. நான் அழுது கலங்கி அரற்றிய இடம் அது.  துன்பங்களைக் கடந்து இன்பத
சுந்தரபுத்தனின் ”மஞ்சள் பூக்கள் நிறைந்த தெரு” ஏதோ ஒரு பகலில் கவிஞர், கலை விமர்சகர் இந்திரன் வீட்டில்தான் சுந்தரபுத்தன் எனக்கு அறிமுகம் ஆனது. அங்கங்கே பார்த்துக்கொண்டால் ”அலோ” சொல்லிக்கொண்டதுண்டு. அப்புறம் நுங்கம்பாக்கம் ஸ்ரீபவன் ஓட்டலில் வைத்து கவிஞர் வசந்தகுமாரனுடன் வைத்து மதிய உணவு. பிறகொருநாள் பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் என்றும் வெங்கட் நாராயணா சாலையில் எழுத்தாளர் ஜெயகாந்தன், தீராநதி மணா கலந்து ”வார்த்தை” இதழ் வாசகர் கூட்டம் ஒன்றில் என அங்கும் இங்குமாகச் சில தேநீர்த்தித்திப்புச் சந்திப்புகள்.  அவரை எனக்குத் தெரிந்த அளவுக்கு அவர் என்னை ஞாபகம் வைத்திருக்க எந்த முகாந்திரமும் இல்லை.  நிற்க. முகநூலில் பார்த்து நானாகப் போன ஒரு விழாவில்தான் அவரது ”மஞ்சள் பூக்கள் நிறைந்த தெரு” வெளியிடப்பட்டது. மனம் நிறைந்த பேச்சுகளாக இருந்த கூட்டம். இனி நூல் குறித்து. பின்னட்டையில் பதிப்புரை தவிர முன்னுரையோ அணிந்துரையோ இல்லாத புத்தகம். எனக்கென்னமோ அகதி முகாமில் இருக்கும் இலங்கைத் (ஈழத்) தமிழன் போல் பட்டது. அதற்கேற்றாற்போல் இந்தப்புத்தகத்தின் முதல் வரியே முள்ளிவாய்க்கால் என்றுதான் தொடங்குகிறது
வெறி ******** வெவரமான மனுசன் தோத்து வெட்டரிவா ஜெயிக்குது சுவருகட்டி மனுஷனையே துண்டு துண்டா பிரிக்குது பெத்தமகளை வெட்டுது பேத்தி தலையை அறுக்குது கத்தியாலே மருமகனைக் கண்டதுண்டமாக்குது அப்பனையே ஆளுவச்சி அறுத்துப்போட வைக்குது அப்புராணி தங்கச்சிய காய்கறியா நறுக்குது உத்தபுரம் விழுப்புரம்னு ஊருஊரா அலையுது செத்தப்புறமும் பழிமினுங்க சேரியெல்லபாம் எரியுது ஊருரெண்டா போகுது உசுரு துண்டா ஆகுது யாரு தந்த நோய்இது என்வயிறு எரியுது காதல்கிளிங்க கழுத்தறுக்க கத்திய எதுக்கொடுத்தது வீதியில வெட்டிப்போட வெறிய எது வளத்தது "மனு" கொடுத்த நோய்இதுக்கு மருந்து யாரு எடுத்தது? மருந்திருந்தும் எடுத்துக்கொள்ள மக்கள்மனம் தடுத்தது சின்னக்கட்சி பெரியகட்சி சேந்துதான வளக்குது சின்னம் காட்டித் தேர்தலுல தில்லுமுல்லு முளைக்குது சாதிபேரில் கொல நடந்தா சட்டசபையைக் கலைக்கணும் சாதிபெருமை பீத்தினாலே ஆயுள்தண்டனை கொடுக்கணும் சாதிமாறிக் காதலிச்சா வேலை அரசு கொடுக்கணும் முதலமைச்சர் பாதுகாப்புல முழுக்குடும்பம் இரு
ஆதியிலிருந்து அந்தம் வரை பாடம் ******** ஆசிரியர்களால் ஆனதிந்த உலகம்.  இல்லையெனில் ஆதியில் தோன்றிய மனிதர்கள் இன்னும் காட்டுமிராண்டிகளாய்க் கம்பும் கல்லுமாய் ஒருவரை  ஒருவர் துரத்திக்கொண்டிருக்கலாம் தாய் தன் பிள்ளைக்குச் சைகை மொழியைத் தத்தளித்தாள் அல்லவா? அதுதான் மூலத்தாய்மொழி.  அதிலிருந்து கிளைத்ததுதான் அநேக மொழிகள். மொழிக்கு இப்படி. காலப்போக்கில் கணக்கற்ற கலைகள். ஒவ்வொரு கலைக்கும் ஒவ்வொரு ஓர்மை. சொல் எழுத்துக்குத் தாவியதும், கலை, இலக்கியமாய் உருவெடுக்கவும் காலம் எத்தனை ஆசிரியர்களைக் கணக்கற்று ்ஈன்றெடுத்திருக்குமோ? .ஒரு வகையில் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு ஆசிரியர்தான். கொஞ்சம் நினைவுகளைப்பின்துரத்திப் பார்க்கிறேன்.  என் சின்ன வயசில் எனக்கொரு பைத்தியக்காரப் பழக்கமாென்றிருந்தது.  அதாவது எனக்குக் கருத்து தெரிந்த அந்த சிறுபருவத்தில் பேசுவதையே ஒரு பாட்டைப்போல ராகமெடுத்துப்பாடுகிற பாவனையில் சொற்களை உருட்டிக்கொண்டிருப்பேன்.  அப்போது எத்தனை வயசிருக்கும் என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. செஞ்சிக்குப்பக்கத்தில் அவியூர்தான் என் பாட்டி ஊர்.  அன்று பக்கத்தில்
தாண்டவம் என் விரல்கள் நர்த்தனமிடும் நடராஜ கால்கள் நடன உச்சத்தின்  நாயக ஆட்டம் நயனங்கள் ஈர்க்கும் நாட்டிய வட்டம் கைகளும் கால்களும் ஆரங்களாக உருளும் அற்புத காலச்சக்கரம் என் சிருஷ்டியும் சிதம்பர ரகசியம்