இடுகைகள்

செப்டம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
கனடா பயணக் குறிப்புகள் சாலை விதிகளும் சமூக விதிகளும் ••••••••••••••••••••••••••••• நா.வே.அருள் கனடாச் சாலைகளில் வலப்புறத் திசைப் பயணங்களாக இருக்கின்றன.   நம் நாட்டில் எப்படிச் சாலைகளில் இடப்புறம் போவோமோ அப்படி அங்கு வாகனங்கள் எல்லாமே வலப்புற விதிகளைப் பின்பற்றிப் போய்க்கொண்டிருந்தன.   “சாலையில் மட்டுமல்ல, சமூகத்திலும் இடதுபுறம் பாதுகாப்பானது” என்றெல்லாம் இளமையில் கவிதை என்ற நினைப்பில் எழுதிக்கொண்டிருந்த எனக்கு இது ஆச்சரியம் அளிப்பதாக இருந்தது. இடதுபுறச் சாலை விதிகள்தான் நமக்குப் பரிச்சயம்.   நமக்கு மட்டுமல்ல.   நம்மைப் போலவே பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் காலனி நாடுகளாக இருந்த ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா நாடுகளிலும் இப்படித்தாம்.   ஏன் அதன் காலனி நாடான கனடாவிலும் இடதுபுறச் சாலை விதிகள்தாம் இருந்தன.   ஏறக்குறைய எழுபத்தைந்து நாடுகளில் இடதுபுற சாலை விதிகள் இருக்கின்றன.   உலகின் மொத்த மக்கள் தொகையில் முப்பத்தைந்து விழுக்காட்டு மக்கள் தொகை இடதுபுற விதிகளைப் பின்பற்றுகிறார்கள். இந்தியா, ஆங்காங், புரூனே, வங்காளதேசம், பூட்டான், மலேசியா, பாகிஸ்தான், சிங்கப்பூர், இந்தோநேசியா, இலங்
கலையும் சமூகமும் பிரிக்க முடியாததா? ****************************************************************                       கலை என்பது என்ன என்கிற கேள்வி காலகாலமாகக் கேட்கப்படுகிற கேள்வி. “ஒரு மனிதன் உள்ளுறைபவனை மற்றொரு மனிதனின் உள்ளத்துக்குக் காட்டுவதுதான் கலை.   அது ஒருவனின் உண்மையான பரிச்சயத்தை மற்றவனுக்குக் கொடுக்கிறது.   ஒருவனின் மௌனச் செய்தியை மற்றவனுக்குத் தெரிவிக்கிறது.   ஒருவனுடைய சுய துக்கங்களின் அனுபவத்தை இன்னொருவன் பெறும்படி செய்கிறது.   ஒருவனுக்குரிய செல்வத்தை மற்றவனும் அனுபவிக்க உதவுகிறது…. கலைஞன் ஒரு ரசிகனைக் கற்பனையிலாவது சிருஷ்டித்துக் கொண்டுதான் கலைப்படைப்பில் ஈடுபட முடியும்.   ஆகவே கலைப் படைப்பு உருவாவதற்குக் குறைந்தது இருவர் வேண்டும்.   உருவான பின் எல்லா மக்களுமே அந்தப் படைப்புக்கு உரியவர்களாகி விடுகிறார்கள்.   கலைஞன் ஒரு பக்கம், ரசிகர்கள் மற்றொரு பக்கம்.   ரசிகர்களெல்லாருமே கலைஞனுக்கு அந்தரங்கமானவர்கள்.   கலைஞன் எல்லோரையும் தனக்கு அந்தரங்கமாக்கிக் கொள்ள உதவும் சாதனம்தான் கலை.” 1 கலை அனுபவம் என்பது வெறும் அந்தராத்மாவில் தோன்றுவதா?   அல்லது நாம் நல்லது
பயணக் குறிப்புகள் மனம் ஒரு கோவேறு கழுதை ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ நா,வே.அருள் ~~~~~~~~~~~~~~ உலக வரைபடத்தில் பார்த்துக்கொண்டிருந்த வெளிநாடு ஒன்றில் நேரடியாகக் கால்வைக்க முடியும் என்று கனவுகூட கண்டதில்லை.   நம் வாழ்வின் சக்கரங்கள் ஒரு புதைமணலில் சிக்கிக் கொண்டிருக்கும்போது ஆகாயத்துப் பறவைகளை அண்ணாந்து பார்க்க முடிவதில்லை.   அதுவும் ஓர் அலுமினியப் பறவை மூலம் பறந்து அண்டை நாட்டுக்குப் போவதென்பது அத்துணை எளிதானதல்ல.   ஏதோ என் வாழ்விலும் நிகழ்ந்துவிட்டது. கனடாவின் வான்கூவர் நகரை அடைகிற போது ஒருமுறை மீண்டும் மனம் சென்னையிலிருந்து விமானத்தில் வந்த தருணங்களை அசைபோட ஆரம்பித்தது.   சென்னையில் விமானத்துக்குள் ஏறியதும் கைச்சுமைகளைத் தலைக்குமேல் இருக்கும் தாங்கு பெட்டிகளில் வைத்து அடைத்துவிட்டோம். ஒவ்வொரு இருக்கைக்கு எதிரேயும் ஒரு மின்திரை ஒளிர்ந்து கொண்டிருந்தது.   காதில் கேட்கும் கருவிகளைப் பொருத்திக் கொண்டு விமானத்தின் பறத்தலைக் கவனிக்கலாம்.   பருவ மாற்றங்களைப் பார்த்துக் கொண்டு வரலாம்.   இசையை ரசித்துக்கொண்டு வரலாம்.   சினிமாக்களைத் திரையிட்டுக் கொள்ளலாம்.   நான் கிளின்ட் ஈஸ