இடுகைகள்

பிப்ரவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
வானம் நிலா நட்சத்திரங்கள் ••••••••••••••••••••••••••••••••••••••• எழுத்து வேட்டையில் பேசும் புதிய சக்தி ************************************************************** பேசும் புதிய சக்தி சமீப காலமாக மிகவும் முக்கியத்துவம் அடைந்து வருவதை உணர முடிகிறது.   பல முக்கியமான இலக்கிய ஆளுமைகள் அதில் தங்கள் பங்களிப்பைச் செய்து வருகின்றனர்.   கலை விமர்சகர் இந்திரன், மூத்த இலக்கிய ஆளுமை கவிஞர் சிற்பி தொடங்கி சா.க என்று செல்லமாக அழைக்கப்படும் சா.கந்தசாமி வரையிலும் அதில் படைப்புப் பங்களிப்புச் செய்து இருக்கின்றனர்.   இவர்கள் எழுதுவதாலேயே ஒரு பத்திரிகை முக்கியமானதாகி விடும் என்கிற அர்த்தமில்லை.   பலப்பல புதிய எழுத்தாளர்களையும் இனங்கண்டு அவர்களுக்குத் தனித்த அடையாளத்தை ஏற்படுத்தித் தருவதில் இந்த இதழ் வெற்றி பெற்று வருகிறது. தமிழ் இலக்கிய உலகத்திற்கு மறதி அதிகம்.   அல்லது கவனிக்க வேண்டியவர்களைக் கவனிக்காமல் அல்லது கவனிக்க விரும்பாமல் பராக்குப் பார்த்துச் செல்கிற குணம் உண்டு.   இல்லையெனில், தமது மேட்டிமை இலக்கிய பந்தாவிற்கு இதுவெல்லாம் ஓர் எழுத்தா என்கிற இளக்காரமுண்டு.   அந்த வகையில் கலைமகள