இடுகைகள்

மே, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உலகம்

கம்பனும் புதுமைப்பித்தனும் உலகம் யாவையும் தாமுளவாக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே சும்மா ஒரு ப்ளாக் ஆரம்பிக்கலாமே என்று தோன்றியது. உடனே ஆரம்பிச்சாச்சு. எனக்கு ப்ளாக் சரிவருமா என்று கூட யோசிக்கவே இல்லை. யோசிக்காமலே செய்யும் பல காரியங்களில் இதுவும் ஒன்று. யோசித்தவர்களுக்கெல் லாம் என்ன பலன் கிடைத்துவிடுகிறது? மேலும் உலகிலேயே ஆகப்பெரும் சோம்பேறி நான் என்பது என் அசைக்கமுடியாத கருத்து. திடீர் என்று திட்டம் இடபடாத திட்டத்தை நிறைவேற்றியாச்சு. சரி. ப்ளாக்=கு என்ன பெயர் வைப்பது? உடனே எனக்கு ஞாபகம் வந்தது உலகம்தான். உலகம் என்ற வார்த்தை கம்பனின் வரிகளை அழைத்துவந்துவிட்டது. கம்பன் நான்காம் வரியில் (அவர்) தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே என்று ஒரு போடு போடுவார். மாதவராஜ் தனது இடுகை தீராதப்பக்கங்களில் கடவுள் பற்றி புதுமைப்பித்தன் கோபாலபுரம் சிறுகதையில் சொன்ன வாசகங்களை நினைத்துக்கொள்கிறேன். "மனிதனாவது கடவுளாவது! சீச்சீ! சுத்த அபத்தம்! இதில் தெய்வம் தன்னை வழிபடவேண்டும் என்று மனிதனை எதிர்பார்க்கிறதே, அதைப் போல முட்டாள்தனம் வேறு