இடுகைகள்

மே, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
Madhusudan Rajkamal அவர்களின் பதிவு ****************************************************** பின்நவீனத்துவ பித்துக்குளிகளும் அர்த்தமற்ற பிழைப்புவாதிகளும்! வரவர இந்த பின்நவீனத்துவ பித்துக்குளிகளின் அட்டகாசங்கள் சகிக்கக்கூடியதாக இல்லை.ஒரு பிரச்சனையை கோட்பாட்டு ரீதியாக விவாதிப்பதற்கு மறுத்து அல்லது திராணியற்று மார்க்சியம் சாதி குறித்து டீப்பா.... ஆய்வு செய்யவில்லை.அம்பேத்கர் அளவுக்கு நுனுக்கமாக ஆய்வுசெய்யவில்லை என்று கதா காலட்சேபம் செய்ய துவங்கிவிடுகிறார்கள்.சரி அண்ணல் அளவிற்கு சாதியின் பன்முகத்தை இடதுசாரிகள் பார்க்க துணியவில்லை அல்லது முரண்டுபிடிக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம்.அதில் நமக்கு மாற்று கருத்தில்லை.ஆனாலும் அப்படி டீப்பா..... ஆய்வே செய்யவில்லை என்று சொல்வது எப்படி சரியாக இருக்கும்.அது பச்சை பொய் என்று உங்களுக்கே தெரியாதா.பி.டி ரணதிவே,இ.எம்.எஸ்,இன்னும் முகம் அறியாத பல மார்க்சிய ஆய்வாளர்களின் சாதி குறித்த ஆய்வுகளை எல்லாம் அப்படியே நீங்க கரைச்சி குடிச்சிட்டீங்களா.இங்கு பிரச்சினை மார்க்சியமும் அம்பேத்கரும் சாதியை எப்படி அனுகினார்கள் என்பது தான் பிரதானமே தவிர ஆய்வே செய்யவி