கவிச் சக்கரவர்த்திகள் ********************************** கவிதைக்குள்ளிருந்த ரசாயனப்புட்டி கவிழ்த்துக்கொள்ள மாளிகை தீப்பிடித்துக்கொண்டது கவிஞர்கள் இறந்துகிடந்தார்கள் கவிதைகள் ஐரோப்பியப் புதைசேற்றில் அமிழ்ந்து கிடந்தன. அப்போது அலகுகளில் மெகா ஃபோனைச் செருகி வனங்களில் கீதங்களுடன் வந்தன வானம்பாடிகள். இதயத்தில் வாழ்ந்தவர்கள் இரைப்பைகளின் பாலைவனத்தில் பனைமரங்கள் நட்டவர்கள் சிறகுகளால் நடந்தவர்கள் கால்களால் பறந்தவர்கள் காற்றில் நீந்திய மீன்கள் தலைமுறை ரௌத்ரத்தின் தாயாதிகள் காளியின் நாக்கில் கவிதையை எழுதியவர்கள். தலையணைக்குள் மூளைகள் முளைத்தன. ஒருவன் ஒவ்வொரு புல்லுக்கும் பெயர் சூட்டியவன் இன்னொருவன் சகாராவைத் தாண்டாத ஒட்டகம் மற்றொருவன் பால்வீதியின் பித்தன் ஒருவன் கவிதையின் நெற்றியில் ஆயுதம் வைத்தவன் இன்னொருவன் கவிதையின் நெற்றியில் கனவுகள் பூசியவன் மற்றொருவன் கவிதையின் நெற்றியில் பிறையைச் சூடியவன் ஒருவன் புழுதித்தடங்களில் போர்வாள் செய்தவன் இன்னொருவன் அரச விருந்தினில் நஞ்சுண்டு கிடந்த
இடுகைகள்
ஆகஸ்ட், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது