இடுகைகள்

ஏப்ரல், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.... சம கால சமூக அரசியல் நிகழுவுகளில் இடஒதுக்கீடு எதிர்ப்பு, தலித் எழுச்சி, பாபர் மசூதி இடிப்பு, இவற்றின் ஊடாக இந்துத்துவ சக்திகள் தங்களது பரிசோதனைகளில் புதிய வடிவெய்தி இருக்கிறார்கள்.  படுகொலை, வன்புணர்ச்சி, கொள்ளை, தீவைப்பு, போன்றவை நடந்து முடிந்த பின்னும் மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படுகிறது நினைவுகளில். மவுனம், அடர்ந்த மவுனம் எதிர்வினையாக கசிகிறது.  ஒட்டுமொத்த சிவில் சமூகமும், கொலை வெறியில் மகிழ்ந்த தருணங்கள் முன்னெப்போதும் இருந்ததில்லை. காவல் துறை, நீதித்துறை, அரசாங்கம் எல்லாம் மோடியின் கரசேவகர்களாகக்  கைகட்டி, வாய் பொத்தி... உச்ச நீதிகளின் "மனசாட்சி" விருப்ப ஓய்வில் சென்றுவிட்ட நிலையில்... இடதுசாரிகள், மனித உரிமை ஆர்வலர்கள், மாற்று பத்திரிகைகள் இதர மிச்சமிருக்கும் சக்திகளின் எதிர்ப்பு நடவடிக்கைகள் மட்டுமே நம்பிக்கையளிக்கிறது. நன்றி:  குஜராத் 2002 டெஹல்கா அம்பலம் - அ .மார்க்ஸ்  - பயணி வெளியீட்டகம்