இடுகைகள்

ஜூலை, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
கடிதம் கொள்கலன் எண் 610 உலகிலேயே மிக வலிமைவாய்ந்த குற்றவாளி வாரன் ஆண்டர்சனுக்கு, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு டிசம்பர் இரவில் உயிரிழப்புக்கும், தலைமுறை ஊனத்திற்கும் உயிர்ச்சிதைவு நோய்களுக்கும் ஆளான போபால் நகரத்திலிருந்து கையாலாகாதவன் எழுதிக்கொள்ளும் கடிதம். ஞாபகம் இருக்கலாம். அமெரிக்க அரசின் காங்கிரசு, கார் தயாரிக்கும் டொயாட்டா நிறுவன்த்தின் உயர்மட்ட நிர்வாகிகளையும், நிறுவன முதலாளியையும் குற்றம் சாற்றிய கதை. விவரம் இதுதான்…இரு சக்கர வாகனங்களில் குறைபாடு இருந்ததாம். அதனால் அமெரிக்க மக்களுக்கு உயிர்ச்சேதம் ஏற்பட்டால்…. அதற்காகத்தான் டொயாட்டா முதலாளியையும், அலுவலர்களையும் காங்சிரசில் வைத்து சரமாரியாக விசாரித்து வைதார்கள். அமெரிக்கர்களின் தேசப்பற்றுக்கு ஒரு அளவே இல்லையா ஆண்டர்சன்? இதுவும் ஞாபகம் இருக்கலாம். இருபத்தைண்டாண்டுகளுக்குப் பிறகு 2010 சூன் 7 ஆம் நாள் வெளியான போபால் நச்சுவாயுவைவிட ஆபத்து மிகுந்ததும் ஆச்சரியத்தைக் கொடுத்ததும் உயிரை உலுக்குவதுமான தீர்ப்பு. தன்னையும் மீறிய தருண்ம் ஒன்றில் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, இது தாமதமான, புறக்கணி