இடுகைகள்

டிசம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
ஆர்.கே நகர் இடைத் தேர்தல் வாக்காளர்களுக்கு அன்புத் தமிழன் எழுதும் அரசியல் கடிதம். நீங்கள் பணம் வாங்கி ஓட்டுப்போட்டதாக ஒவ்வொருவரும் பேசிக்கொள்கிறார்கள். யார் வாங்கினீர்கள் யார் வாங்கவில்லை என்பது உங்கள் மனசாட்சிக்குத்தான் வெளிச்சம். இருக்கலாம். ஓரிரண்டு நாட்களுக்காவது இலவசமாய்ச் சித்தித்த புது குக்கரில் சமையல் செய்து பார்க்கலாம் என்று உங்கள் பசி உங்கள் கௌவரவத்தைச் சமாதானப் படுத்தியிருக்கலாம்.  எப்படியெல்லாம் சம்பாதித்த பணம் மக்களுக்கு வந்தாலென்ன என்ற எண்ணமாகவும் இருக்கலாம். பொதுவாகவே வாக்குச்சாவடி முகவர்களுக்குக் கொடுக்கிறபோது நமக்குக் கொடுத்தாலென்ன என்று நீங்கள் நமத்துப்போகத் தொடங்கிய தீக்குச்சிகளாகிவிட்டீர்கள்.  எதுவானாலும் சரி, பணம் வாங்குகிற எண்ணம் சரியானதா?  ஊழலின் ஊற்றுக்கண் உங்களிடமிருந்து தொடங்க நீங்கள் அனுமதிக்கிறீர்களா?  இலக்கு எவ்வளவு நியாயமானதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு வழிமுறையும் நேர்மையானதாக இருக்கவேண்டுமென்று மகாத்மா காந்தியின் வார்த்தைகள் கொஞ்சம்கூட உங்களைச் சலனப்படுத்தவில்லையா? பணம் வாங்கி வாக்களிக்கிற ஒரு காரணத்தாலேயே உங்களின் கூர்த்த மதி வே