இடுகைகள்

2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
ஓர் எழுத்தாளனை நாம் ஏன் கொண்டாடுகிறோம்?   அந்த எழுத்தாளன் எப்படிப் பட்டவனாக இருப்பதால் கொண்டாடுகிறோம்?   அவனிடம் நமது கனவுகளை ஏற்றி வைத்துவிடுகிறோம். நமது துயரங்களை அவன் சுமக்க முடியாமல் சுமந்து செல்கிறான். அவன் நாம் நடந்துசெல்லும் வழித்தடத்தை – ஒற்றையடிப்பாதையை – உருவாக்கித் தருகிறான்.   வழியில் நிழல் தரும் மரங்களை வளர்த்துச் சுனைகள் எங்கிருக்கின்றன என்று சொல்லித் தருகிறான். தோழர் எஸ்.ஏ.பெருமாளின் வார்த்தைகளில் எழுத்தாளர் சமூகத்தின் பெரிய வாத்தியார்.   அவருக்குச் சொல்லிக் கொடுக்க இந்த உலகில் ஏராளம் இருக்கின்றன.   சரியான ஆசிரியர் யார் என்று கண்டுபிடிப்பதில் நமக்குத்தான் இன்று ஏராளமான குழப்பங்கள்.   குழப்பங்கள் வேண்டுமென்றே உருவாக்கப்படுகின்றன. இதையெல்லாம் மீறி மக்கு மாணவர்களையும் ஆசிரியர் சரியாகவே அடையாளம் கண்டுகொள்வார்.   அப்படிப்பட்ட ஒருவர்தான் எழுத்தாளர் பிரபஞ்சன். காயங்கள் எப்படி ஏற்பட்டதென்பதையும் அறியாமல் கசிந்துகொண்டிருக்கும் குருதியைத் துடைத்துக்கொண்டே இருக்கும் நோயாளிகளுக்கு எழுத்தாளன்தான் காயங்களின் ரிஷிமூலத்தை ஆராய்ந்து காயங்களிலிருந்து எப்படித் தப்பிப்பது என்கிற சூட்
லெனின் பாரதியின் “மேற்குத் தொடர்ச்சி மலை” மேற்குத் தொடர்ச்சி மலை ஆரவாரமில்லாத எளிமையின் அழகு பொருந்திய   திரைப்படம். நவீன காலத்து இயக்குநர்களில் நம்பிக்கைக்கு உரியவராகத் தன் இருப்பினைத் தனக்கே உரிய இயல்பான முறையில் தக்கவைத்துக் கொள்கிறார் புதிய இயக்குநர் லெனின் பாரதி. அடிவாரத்திலிருந்து ஏறிச் செல்வதற்கு அவ்வளவு இலகுவாக இல்லாத ஒரு மலைக்கிராமத்தை ரத்தமும் சதையுமாக எந்தவிதமான சினிமாத்தனமும் இல்லாமல் படக்காட்சிகளில் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது. வேறு ஊரிலிருந்து பஞ்சம் பிழைக்கவந்த ஒருவன் எப்படி எப்படியெல்லாம் அந்த மக்களோடு ஒன்றித் தன் பேச்சினைத் தகவமைத்துக்கொள்கிறான்,   வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்கிறான் என்பதெல்லாம் கூர்ந்து நோக்கத் தக்கது. கடைசியில் அவன் வெளிநாட்டுக்காரனுடன் இணைந்து எப்படி உள்ளூர் நிலங்களை வளைத்துப் போடுகிறான், அவனது நவீனக் கந்துவட்டித்தனம் என்பதெல்லாம் அருமையாகக் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது. லோகு ரியல் எஸ்டேட், லோகு கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்றெல்லாம் வளர்ந்து பிரம்மாண்டமாகிவிட்டான் என்பதை அவனுடைய பிரேஸ்லெட்டின் மூலமும், வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை

அண்டனூர் சுராவின் \\கொங்கை\\

அண்டனூர் சுராவின் கொங்கை குறுநாவலை முன்வைத்து **************************************** “,,,,,, துடைத்தகற்ற முடியாத இரு கண்ணீர்த் துளிகளாய்த் தேங்கித் தளும்புகின்றன.” குட்டி ரேவதி ‘முலைகள்’ என்கிற தனது தொகுப்பில் இடம்பெறும் கவிதை வரிகளுடன் தொடங்கலாம்.   ஒரு நிறைவேறாத காதலில் என்கிற வரியை வேண்டுமென்றே நீக்கிவிட்டேன்.   மேலே இடம்பெற்ற இந்த மூன்று வரிகளின் வலி மிகுந்த விரிவாக்கம்தான் அண்டனூர் சுராவின் ‘கொங்கை’ என்கிற இந்தக் குறுநாவல். பெண்கள் ஆண்களைப் பற்றிய காமச் சிந்தனைகள் சம்மந்தமான விஷயங்கள் பரந்த அளவில் தெரியப்படாத தமிழ்ச் சமூகத்தில் ஆண்கள் பெண்கள் பற்றிய சிந்தனைகளில் முலைகள் எந்த அளவுக்கு ஆக்கிரமித்திருக்கிறதென்பதை அப்பட்டமாகப் பதிவு செய்துள்ளார் அண்டனூர் சுரா. ஆண்களின் மூளை முழுவதும் முலைகளாகத் தொங்குகின்றன. ஆண்களை மட்டுமல்ல, பெண்களும் சகப் பெண்களின் முலைகள் பற்றிய அங்கலாய்ப்புகளிலும், ஆவலாதிகளிலும் அளவுக்கதிமாகவே ஈடுபடுகின்றனர். இதைச் சர்வே பண்ணித்தான் பெண்களின் உள்ளாடை விளம்பரக் கம்பெனிகள் தங்கள் கார்ப்பரேட் கைகளை அகல விரித்திருக்கின்றன. வியாபாரச் சூத்
அறிவிக்கப் படாதொரு அவசர நிலைகாலம் அடிபொய்யை வடிகட்ட அரசாங்க ஜமுக்காளம் தெரிவிக்கப் படாதொரு தேசத்தின் போர்க்காலம் தெருவதிர நடந்தாலே திருவடிக்குச் சிறைக்காலம் கனவு கண்டாலே கைது நடவடிக்கை கார்ப்பரேட் கட்டளைக்குச் சுடுகாட்டு உடன்படிக்கை உணவில் உப்பிருக்கா? உளவுத்துறை தடுக்கும் உறக்கத்தில் குறட்டைகளா? ராணுவமே வந்தடக்கும் இம்மென்றால் வனவாசம் ஏனென்றால் சிறைவாசம் சர்க்கார் அடிமைகளாய்ச் சாகும்வரை உபவாசம் கம்மென்று இருப்போமா? கண்மூடிக் கிடப்போமா? கவிதையிலே சொறிந்துவிட்டுக் கால்நீட்டிப் படுப்போமா? மோடி போட்டிருக்கும் முகமூடி எத்தனையோ? முகமூடிக் குள்வடிக்கும் முதலைக்கடல் எத்தனையோ? நாடு முழுவதிலும் நாகங்கள் எத்தனையோ? நாகத்துக் குள்ளிருக்கும் நஞ்சுவகை எத்தனையோ? பாரத் மாதா கி ஜே சொல்லிச் சொல்லி மக்களுக்குப் பாடை கட்டுகிற பாசாங்கு எத்தனையோ? வீரத் தமிழ்நாட்டில் வேட்டைகளும் எத்தனையோ? வேட்டைகளுக் குள்ளிருக்கும் வெடிவிபத்து எத்தனையோ? மூலைக்கு மூலை மூலதனம் எத்தனையோ? மூலதனம் செய்யுகிற மூர்க்கத்தனம் எத்
இந்திரன் காலம் ‘ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ “அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்” தொகுப்பிலிருந்து லாங்ஸ்டன் ஹ்யூக்ஸின் “கறுப்பு இயேசுநாதர்” கவிதையை முதன்முதல் வாசித்தபோது பிரமிப்பின் உச்சத்தைத் தரிசித்தேன். அன்றைக்கு அண்ணாந்து பார்க்க ஆரம்பித்த ஆளுமை அந்தத் தொகுப்பைத் தமிழில் கொண்டுவந்திருந்த இந்திரன். அதைத் தொடர்ந்து மொழிபெயர்ப்பின் ஊடாகக் காற்றுக்குத் திசையில்லை, பசித்த தலைமுறை, பிணத்தை எரித்தே வெளிச்சம், கடவுளுக்கு முன் பிறந்தவர்கள், மஞ்சள் வயலில் வெறிபிடித்தத் தும்பிகள் என்று கவிதைப்புலத்தில் ( + கட்டுரைத் தளத்தில்) காத்திரமான கவிதை மற்றும் இலக்கியப் போக்குகளை அடையாளப்படுத்தியுள்ளார். புதுமையான இலக்கியப் போக்குகளை அவரது சொந்தப் படைப்புகளான சாம்பல் வார்த்தைகள் முதல் மின்துகள் பரப்பு வரையிலும் காண இயலும். பத்தாண்டுகளுக்குப் பிறகு அவை ஏற்படுத்தியத் தாக்கத்தைத் தமிழ்க் கவிதையில், இலக்கியத்தில் ஒரு புதிய போக்கினைத் தரிசிக்க நேர்ந்தது.    கவிதையில் மாத்திரமா? கூர்ந்து அவதானிக்கும்போது அவரது ஒவ்வொரு தொகுப்புமே கவிதையில் ஒரு புதுவிதமானத் திசையினைத் தமிழ்ப் பரப்புக்கு அறிமுகப் படுத்தியிருப்பதை உ
இலக்கியம் என்றால் பாரதி, கண்ணதாசன், வைரமுத்து என்று இருந்த காலத்தில் என் கைப்பிடித்து நடைவண்டி கொடுத்தவர்களை எப்படி மறக்க முடியும்?   அந்த இருவருக்கும் இன்று (14-7-2018) இலக்கியத் திருவிழாக்கள். இந்திரனை முன்வைத்து ஓவியக் கண்காட்சி புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் தொடங்குகிறது.   தமுஎகச நிகழ்ச்சியின் காரணமாகப் புதுவை செல்ல இயலவில்லை. இளையபாரதியின் வ உ சி நூலகத்தின் 21 நூல்கள் வெளியீட்டு விழாவில் கல்யாண்ஜியின் 776 பக்கங்களில் முழுக் கவிதைத் தொகுப்பும் இன்று எம் ஆர் சி நகர் இராஜரத்தினம் அரங்கத்தில் வெளியாகிறது.   எட்டு மணியளவில் உள்ளே நுழைகிறேன். தோழர் டி.கே.ஆர் அவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தார்கள்.   அவருக்கே உரிய புன்சிரிப்புடனும் நிதானத்துடனும் இன்றைய காலக்கட்டத்தில் மார்க்சியத்தின் மேலதிகப் பொருத்தப்பாட்டைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். என்னை ஆச்சரியப் படுத்தும் விதமாக முதலாளித்துவம் மற்றும் சோசலிசம் குறித்து எளிய முறையில் விளக்கினார்.   முதலாளித்துவம் தனது விதிகளைச் செயல்படுத்துகிறபோது தோற்றுப் போகிறது. சோசலிசம் தனது விதிகளைச் செயல்படுத்தாதபோது தோற்றுப் போகிறது என்ற