இடுகைகள்

செப்டம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
  கவி உலா **************** நா.வே.அருள்   கவிஞர்கள் முகம் பார்ப்பதில்லை; வலி பார்க்கிறார்கள்.   பூ பார்ப்பதில்லை;   மணம் நுகர்கிறார்கள்.   நிறம் பார்ப்பதில்லை; நிஜம் பார்க்கிறார்கள். நாம் பார்த்ததைத்தான் அவர்களும் பார்க்கிறார்கள்.   ஆனால் நமக்கு எதையெதையோ காண்பிக்கிறார்கள்…. ஒரு கவிதையோ…. ஒரு கவிதையில் சில வரிகளையோ…. உங்கள் முன் படைக்கிறேன். அனைத்துக் கவிஞர்களுக்கும் நன்றி.   இன்றைய உலாவில்   சில கவிதைகள்   இந்த வினாத்தாள்கள் ஏன் இப்படி உயிர் பறிக்கின்றன விடை தெரிந்த வினாக்கள் ஏராளமிருக்க சூழ்ச்சிகளே வினாக்களான பின்…. ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, தேர்வுகளைத் தீ தின்னும் காலம்…. இப்போதைக்கு முடிந்ததெல்லாம் தனித்த குரல்களையெல்லாம் கூட்டுக் குரல்களாக்குவதுதான்   க.அம்சப்ரியா Punnagai Amsapriya   *****   கறையான் புற்றை சிதைத்துவிட்டு மழைத்துளியில் அலகு துடைக்கிறது தவிட்டுக் குருவி   சிறுமி குலுக்கி விளையாடும் கூழாங்கல்லில் ஓடும் நதியின் சப்தம்   கவி.விஜய் *****   என் கண்கள் கண்ணீர் வடிக்காததனால் என் இதயம் காயப் படவில்
படம்
  புல்வெளிப் பாலை! ***************************** தேநீர்க் கோப்பையின் விளிம்புகளில் தன்னையறியாமல் உறிஞ்சி ருசி காணும் உதடுகளைப்போல உன் வரவை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டேன். நீ மௌனத்தை ஒரு போர்வையைப் போல போர்த்திக் கொண்டாலும் உன் கறுப்பு வெள்ளைக் கண்கள் காதலைக் காட்டிக் கொடுத்துவிடுகின்றன. என்னதான் பாசிக்குள் ஒளிந்து கொண்டாலும் மேலே வந்துதானே ஆகவேண்டும் மீன்கள்? கடும் பனியின் நள்ளிரவில் உதறலெடுக்கும் வாயினைப்போல எந்த நேரத்தில் உனது பெயர் வெளிப்பட்டுவிடுமோ என்று பயந்துகொண்டுதான் இருக்கிறேன் நீயோ தொட்டதும் உடலை உள்ளே இழுத்துக் கொள்கிற நத்தையைப்போல ஊர்ந்து செல்கிறாய் லேசான தீண்டலில் ஒரு மரவட்டையைப் போல சுருண்டுகொள்கிறாய். இவ்வளவு நீளமான விரலுக்கு அரை விரல்கடை நகம் அழகு சேர்ப்பதுபோல உன்னை நான் பார்க்கும் ஓரிரு நிமிட ஒளிப்பட காலம் என் ஆயுளையே அர்த்தப்படுத்தி விடுகிறது நான் மட்டுமென்ன? உன்னைப் பார்த்ததும் என்னுள் இழுத்துக் கொண்ட இதயம் உன் காதல் கதகதப்பில் வசமிழந்து ஓட்டிலிருந்து வெளிவந்துவிடுமோ என்ற பயத்திலிருக்கும் கடல் ஆமை!! --நா.வே.அருள் Thanks to Prof. Chintamani Vani for his excellent tran
படம்
  ஜே.ஜே.அனிட்டாவின் கவிதைத் தவம் ********************************************************** கவிதைக்கு யோகம் அடித்திருக்கிறது.   கவிஞர்கள் ஒரு கவிதையை முன்வைத்துக் காய்தல் உவத்தல் இன்றி ஒரு கலந்துரையாடல் நிகழ்த்துகிற களம் அல்லது சூழல் சாத்தியமாகியிருக்கிறது.   அனிட்டா அவர்களின் கவிதையைப் பார்க்கலாம். //ஏன் நகர்கிறேன் என்கிறாய் அசைதலற்று தெளிவுறாத பிம்பமாய் உனையுறுத்தி ஒறுத்தலை விடவும் நகர்தல் நலமே. கருணைக் கரமுயர்த்தி உனையழைத்து எனதிருளைக் கவ்விக் கொண்டு நடைபயிலச் சொல்லும் கைங்கர்யம் காட்டிலும் விழி திறந்து அகம் துற என்பதே மேல். ஒரு பிடி நிழல் பிடித்து ஆறடியை விழுங்கிக் கொள்ளும் நினைவுச் சாளரம் விழுங்குதல் பதிலாய் திறந்த கதவுகளின் நிறம் உடுத்தி ஓருயிராய் பிரிந்து கிட என்பதே சரி. இசைதலும் விசை படர் விழைதலும் மறத்தலும் நீர்த்த உயிர்த்தலுமாய் உன்னை அசைவுறாதபடிச் செய்யும் என் இருத்தலை விடவும்.. மெலிந்து நகர்ந்து துயருகிறேன் என்பதே இனிமையான நலம். ஏன் நகர்கிறேன் என்கிறாய்.. நகர்தலென்பது உனையொத்தே நிகழும் ஓரிடம் நில்லாத என் பயணத்