இடுகைகள்

மார்ச், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
கொசுக்களின் குருதியிலிருந்து  கடிதங்களுக்கு மை தயாரித்துக் கொள்கிறவர்   மானுடத்தின் தலைவாசல்  தாய்மடி  பச்சைமண்ணை ஏந்திக்கொள்ளும்  உள்ளங்கை  கருவறை  நாற்றங்கால்  கடவுள் வணங்கும் சந்நிதானம்  இத்தனை பெயர்களிலும்  இன்னும் புனையாத சில புனைபெயர்களிலும்  உலவும் ஆன்மா ... கவிதை! கவிதை கேட்கும் செவிகள் வாய்க்க  காலாற நடக்க வேண்டும்  பாதங்கள் தெருமண்ணைப் புசிக்க வேண்டும்  கண்களுக்கு--- பசியைப் பார்க்கும் பார்வை வேண்டும்  வள்ளுவனுக்குள் வசிக்க வேண்டும்  கம்பனுக்குள் கனிய வேண்டும்  இளங்கோவின் இதயம் வேண்டும்  பாரதியின் பதியம் வேண்டும்  கவிதை கேட்கும் செவிகள் வாய்க்க  காலாற நடக்க வேண்டும்  இதற்கெல்லாம்  புழுங்கும் பூமியில் ஏதொரு புல்வெளி? குப்பைமேடுகளில்  கரப்பான் பூச்சிகளாய் வாழும் வரத்தைக்  கடவுளா கொடுத்தான்...? இழந்த சொர்க்கம் பற்றி  எவரும் நினைப்பதில்லை  சாக்கடைக்குள் புழுவாவதே  "சாகா வரம் " குருதியில் தோய்ந்த வன்முறை வாள்  கொண்டுவந்து சேர்த்ததென்ன ?... ஈக்கள் மொய்க்கும் பிணம்