இடுகைகள்

ஏப்ரல், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
பா(ப)ட்டுக் கோட்டைகள், கவியரசுகள், காவியக் கவிஞர்கள்,  கவிப்பேரரசுகள் முதல் இன்றைய நவீன கவிஞர்கள் வரை  மிகப்பெரும் பாரம்பரியம் கோலோச்சும் தமிழ்த் திரையுலகில் .... சக்கரத்தில் சுத்துகிற மண்ணு கலயமாகுது  பக்குவமா செதுக்குற மரமும் கலப்பையாகுது  சொக்கத்தங்கம் தட்டித் தட்டி நகையுமானது - உளி  சொன்ன சொல்லைக் கேட்ட கல்லும் சிலையுமானது  மக்களோடு மக்களாக சேர்வது எப்போ?- நீ  மாத்தி யோசி மாத்தி யோசி மாறுதல் அப்போ!.... என்கிற பல்லவியோடு மிகவும் பணிவோடு நுழைகிறேன்.  கோடி கோடி ஒளியாண்டுகள் பரப்பளவு உள்ள இந்தப் பால்வீதி மண்டலத்தில் நான் ஒரு சின்ன போஸான் அணுத்துகள் என்று புரிந்தே வைத்திருக்கிறேன்.   வாய்ப்பு வழங்கிய இயக்குனர் பகத்சிங் கண்ணன், என்னையும் குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுக்கொண்ட உதவி இயக்குனர்கள் உள்ளிட்ட அக்னிக்கலைக் கூடம், வரிகளுக்கு மாய சுதி கூட்டி எங்கேயோ கொண்டு சென்றிருக்கும் இசையமைப்பாளர் பி.ஆர். ரஜின், தொடர்ந்து உற்சாகப்படுத்திவரும் ஒளிப்பதிவாளர் புதுயுகம் நடராசன்,  மறைவாக இருந்து என்னை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் மற்றுமுள்ள அனைவருக்கும், இந்த வாய்ப்புக்கே அட
நினைவுகள் அழிவதில்லை  இது  கடந்தகால கதை  எதிர்கால விதை  "மாற்றம் ஒன்றே மாறாதது" சூர்யா முதல் பிரகாஷ் ராஜ் வரை இன்று எல்லோரும் சொல்கிறார்கள்... முதலில் சொன்னவர்  காலத்தை வென்ற "காரல் மார்க்ஸ்" உண்மைதான்... தமிழ் சினிமாவும் மாறிவிட்டது  கதையுள்ள படங்கள்  விளம்பரம் இல்லாமலே வெற்றி பெறுகின்றன.... இளைஞர்கள் என்றால்... காதல் தோல்வியில் சாராய தாசர்கள் ஆகும்  தேவதாஸ்களா ? அதிகாரங்களின் அடிவருடிகளா? பொழுதுபோக்கு பொம்மைகளா? அல்லது  புரட்சியின் தூதுவர்களா? கதையில் வரும் கையூர் மக்களுக்கும்  சென்னை காவாங்கரை மக்களுக்கும்  காலம் கற்றுத்தந்த பாடங்கள் என்ன? அரசியல்... மனிதர்களின் ஆதாரமா? சேதாரமா? வெள்ளைக்காரனின் வேஷங்கள்  பண்ணையாரின் துவேஷங்கள்  படம் முழுதும் இழையோடும் பகடிகள்  அவசியமான அடிதடிகள்  நக்கல்கள் நையாண்டிகள்  சென்னைவாசிகளின் சீண்டல்கள்  வசனங்களின் சிகரங்கள்  ஒலிப்பதிவின் உயரங்கள்  மலைக்குள் மறைந்திருக்கும் சிற்பங்களாக  மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் மகத்துவங்கள்  "மாற்றம் ஒன்றே ம