புத்தாண்டு வாழ்த்துகள் சம்பிரதாயம் என் மனசுக்கு என்னவோ ஒரு மாதிரியாய் இருக்கிறது...
ஆனால்...எல்லோருடனும் பிரியமாய் இருக்க யாருக்குத்தான் பிடிக்காது?
இந்த புத்தாண்டுப் பரிசுகளாக சில கவிதைகள்...
*****
உன்
உலகிற்கு நீ தரும்
உன்னத பரிசு
ரத்தம்
*****
நூலகம் திறந்துவைக்க அழைத்த நண்பனுக்கு
எப்படிச் சொல்வேன்
ஏற்கெனவே யாருமறியாமல்
இதயத்தைத் திறந்துவைத்து விட்டதை.
*****
யதார்த்தம்
நம்மைவிட நன்றாகவே
யோசிக்கிறார்கள்
நம் பிள்ளைகள்
*****
உலகின் மிக நீண்ட கவிதை
பெருமூச்சு
*****
பாட்டி எழுதிய கவிதையை
ஒருமுறை கூட படித்ததில்லை தாத்தா
தினமும்
தாத்தாவின் பல்செட்டை
******
கோபுரத்தின் மீது மேகத்தின் குளிர் நிழல்
ஆசுவாசம் கொண்டன
புறாக்கள்
******
என்னைவிட உபயோகமாய் இருக்க
ஒரு காரியத்தைச் செய்துவிடவேண்டும்....
அம்மாவுக்கு ஒரு கைத்தடி வாங்கித்தர வேண்டும்.
*****
கடந்த ஆண்டின் மிகப்பெரிய சோகம்
என்னவெனில்
வேண்டாம்
பாராளுமன்றத்தின் மிகப்பெரிய பதவியை
விமர்சனம் செய்து....
............
.........
இத்துடன் முடித்துக்கொள்வது தான்
எனக்கு நல்லது...
*****
நன்றியுடன்...
------அசோக்பில்லர் முதல் புதூர் பள்ளி வழியே அம்பேத்கர் சிலைவரை உள்ள என் பிரிய சிநேக மரங்களுக்கு....
கருத்துகள்
கருத்துரையிடுக