அசுரன் 

தாழிட்டு  
வீட்டில்  
பதிரமாகிவிடுகிற  இருள்  நேரத்தில்  
எங்கோ  ஓர்  
இருள்  மலைக்குள்  
இரையைப்  பிய்த்துப்  பிராண்டி  
விழுங்கும்  
பேய்  விலங்கொன்று. 

***

புசிக்கப்பட்டுத்  துப்பப்பட்டு  
நிராதரவான  பெண்  ஒருத்தியின்  
சுருண்டு  கிடக்கும்  உள்ளாடைமேல்  
இழையாய்ப்  பொசியும்  
அவள்  கூந்தலிலிருந்து  உதிர்ந்த  
ஓரிழை  மயிர்.  

***

காற்றில்  ஓய்ந்து  உறைய  மறுக்கும்  
கதறல்களும்  
கன்னத்தில்  காய்ந்து  உலர்ந்த  
கண்ணீர்த் துளிகளும்  
செய்யும்  கெக்கெலி யில்  
வெட்கி  மரவட்டையாய்ச்  
சுருளும்  என்  கவிதை.  

***

இந்த  க்ஷணத்தில்  
என்னைச்  சிலை  வடித்தால்  
விகாரமான  உருவமாவேன்  
கோரைப்  பற்கள்  முளைக்கும்  
கைகளில்  ஆயுதங்கள்  வளரும்  
இடம்  பெயர்ந்து  அசுரனாய்  அசைவேன்  
இந்தப்  பூமிக்  கோளத்தை  
ஒற்றைக்  கையால்  
கருந்துளை  ஒன்றில்  தூக்கி  எறிவேன்.  

--நா. வே.  அருள்  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் நண்பனின் அப்பாவும் சாய்வு நாற்காலியும்