இடுகைகள்

படம்
  தலையில்லாத மனிதனைச் சந்தித்ததிலிருந்து அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறேன்.   தலையில்லாமல் அவனது ஒவ்வொரு அசைவும் சாத்தியமானது எப்படி?   அதுவும் நெரிசல் மிகுந்த நகரத்தில் சாலை விபத்துகளிலிருந்து தப்பித்துக் கொள்வது எப்படி?   அவனைப்பார்த்து ஒருவருமே துணுக்குறவில்லையா?   அவனைப் பார்த்ததைவிட அவன் சொன்னதுதான் மேலும் என்னை உலுக்கிவிட்டது.   கண்களே இல்லாத பார்வைகள் சாத்தியமாகிறபோது தலையே இல்லாத மனிதனுக்கு எப்படிச் சாத்தியமில்லை? இன்னும் அவன் சொன்னான் “நீங்கள் கண்ணாடியைப் போய்ப் பாருங்கள்”   “உங்கள் தலை எங்கிருக்கிறது என்று எனக்குத் தெரியும் ஆனால் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள்.”   “எனது கவலையே வேறு தலையில்லாமல் வாழ்வதற்குப் பழக்கியாக வேண்டும். என்னுடைய குழந்தைகளுக்கு விளையாடத் தர இனி தலையில்லாத பொம்மைகளுக்கு எங்கு போவேன்?” சொன்னவன் இறங்கிப் போய்க்கொண்டேயிருந்தான்.   நான் கண்ணாடியைத் தேட ஆரம்பித்தேன். --நா.வே.அருள் 20.06.2021 காலை 6.00
 என்னைப் பற்றிய தகவல் கட்டுரை Tamilwriters.in இணையதளத்தில் காணக் கிடைக்கிறது.  தொகுத்தவர் - திருமதி ஜெயஸ்ரீ பாலாஜி அவர்கள். இணைப்பு முகவரி ---- http://www.tamilwriters.in/2021/06/blog-post_91.html?m=0
படம்
  நூல் விமர்சனம் – நா.வே.அருள் கவிஞர் ஜெயதேவனின் “ஒருநாள் என்பது 24 மணி நேரமல்ல” ஒரு சுற்று வாழ்க்கை ********************************* வண்ணதாசனைப் படையலிலும் வானவில்களைக் கவிதைகளிலும் வைத்திருக்கும் ஒரு கவிதைத் தொகுப்புதான் ஜெயதேவனின் “ஒருநாள் என்பது 24 மணி நேரமல்ல”. கடிகாரமே தலையாகிப்போன ஓர் அழகான கவிதைதான் முன் அட்டைப்படம். “ஒரு நிமிடம் என்று தூக்கி எறியாதீர்… நிமிடம் நிமிடங்களால் ஆனதே வாழ்க்கை.” காலத்தைப் பற்றிய இந்தக் கவிதைதான் பின் அட்டைப்படம்.   அட்டை முதல் அட்டை வரை மனசில் ஒட்டிக்கொள்ளும் கவிதை அட்டைகள். இந்தியா விடுதலையாவதற்கு ஒரு மாதம் முன் பிறந்த மகாதேவன்தான் கவிதையில் ஜெயதேவன்! “மீன்காரியின் கை வளையொலியில் ஆதி இசை” கேட்கிற செவிகள்; உதிரும் பழுப்பிலையில் மரத்தைக் காண்கிற கண்கள்; உங்கள் மழையும் எனது மழையும் ஒன்றல்ல என்று உணர்கிற ஞானம் என ஜெயதேவன் கவிதைகள் கடற்கரை மணல்வெளியில் குடை ராட்டினம் போலச் சுற்றிச் சுற்றி வருகின்றன.   குதிரை, சிங்கம், புலி, மீன், பெட்டி என வித விதமான இருக்கைகளில் ஒவ்வொரு குழந்தை ஒவ்வொரு விதமாக உட்கார்ந்திருக்கின்றன. ...
படம்
  மரணத்திற்கு ஏன் இத்தனை கை கால்கள்? ஆக்டோபஸைப் போல அறைந்து கவ்வுகிறதே….   மரணத்திற்கு ஏன் இத்தனை வாய்கள்? ஒவ்வொருவராகப் புசித்துக் கொண்டேயிருக்கிறதே….   மரணத்திற்கு ஏன் இத்தனை வேகம்? குதிரைப் படையில் சவாரி செய்கிறதே   மரணத்திற்கு ஏன் இத்தனை ஆவேசம்? பசியடங்காமல் புவியைப் புசிக்கிறதே   அவசர அவசரமாகக் காரியமாற்ற ஆணை இடுவதாக எண்ணித்தான் ஒரு தோழன் ஒவ்வொரு ஆண்டும் கலைஇரவு நடத்திக் கலாச்சாரம் உயர்த்தினான்.   அதற்குள் செய்தாக வேண்டுமென்றுதான் ஒரு தோழன் ஆழமான அரசியலை அள்ளியள்ளி ஊட்டினான்.   நேரமிருக்காது என்று எண்ணித்தான் ஒரு தோழி கவிதைகளில் தோழமையைக் கட்டி எழுப்பினாள்.   ஒரு பொன்னுலகத்திற்கான பாதையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பயணித்துக் கொண்டேயிருந்தார்கள்.   மரணமே உன்னை நானறிவேன்…. உன்னால் முடிந்ததெல்லாம் உயர்ந்த மனிதர்களையும் செயலற்றுப் போகச் செய்வதுதான். ஏற்கெனவே அவர்கள் செய்து முடித்த செயல்களை உன்னால் நெருங்கவே முடியாது உன்னால் நெருங்கவே முடியாது. ...
படம்
  கவியோவியத் தொடர் ************************ யுத்த கீதங்கள் 14 / நா . வே . அருள் நுகத்தடி ************ அரசின் ஏவலாளிகள் ஒரு செங்கோல் செய்து வைத்திருக்கிறார்கள்   கரடு முரடானதும் முட்டாள்தனமானதும் , மூர்க்கத் தனமானதும் உயிர் எடுக்கும் உன்மத்தம் கொண்டதுமான செங்கோலில் ராஜதந்திர முலாம் .   அதில் ஒட்டியிருக்கும் பல உயிர்களின் துள்ளலும் துடிப்பும் சதைத் துணுக்குகளும் ரத்தக் கறைகளும்   கூசும் பொய்களுக்கு ஒத்தடம் கொடுப்பதற்காகவே உடல் முழுதும் வளரும் உதடுகள்   உண்மை எலும்பும் தோலுமாகப் பரிதாபத்துடன் காட்சியளிக்கிறது .   பொய் அவ்வளவு சக்தி வாய்ந்தது அதைப் பிரயோகிக்கையில் பெருந்திரள் கூட்டம் பின்வாங்கி ஒரு பூனையைப் போல ஒடுங்கிப் போகும் .   மிகச் சமீபகமாகத்தான் விவசாயிகள் மீது பிரயோகிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் .   விவசாயிகளோ தங்கள் கழுத்தை அழுத்திய நுகத்தடியை பூட்டாங்கயிறு துணித்து ஆகாயம் முட்டி ஆவேசத்துடன் நிற்கிறார்கள்   இப்போ...
படம்
  அவமானங்களின் அடிவாரம் ******************************************* உனது காயங்களுக்குக் கீழே ஒரு காயம்பட்ட இதயம் காக்கையால் கொத்தப்படும் சுண்டெலியைப்போலக் கொத்தப்படுகிறது.   அது அலகு மனிதர்களின் மாமிச தாகம்.   மரித்துப் போனவர்களின் சொற்களுக்கு மலர் வளையம் போதும்.   உனது அட்சயப் பாத்திரத்திலிருக்கும் வார்த்தைகள் காயத்தைக் கொத்தும் காக்கைகளை விரட்டிச் சிதறுகின்றன.   உனது நீரூற்று ஒரு மலைப் பிரதேசத்தின் தாகம் தணிக்கக் கூடிய குளிர்ந்த சுனை.   உயிரை ஆசுவாசப்படுத்தும் இரண்டு கை நீர் உன்னிடமிருக்கிறது அதை ஒருபோதும வறளவிடாதே.   --நா.வே.அருள்
படம்
  எல்லை காந்திகள் *********************** அவமானப்படுத்தப்பட்ட விவசாயி எல்லையின் வாசலில் உடையணிந்த எலும்புக் கூடாகத் தொங்கிக் கொண்டிருக்கிறான். அவனது அழுக்கடைந்த தலைப்பாகைதான் உலகத்திற்காகத் துடிக்கும் வெளிறிப் போன இதயம். அவனது பஞ்சடைந்த கண்களின் இமைகள் பசியின் சிறகுகள் அதிகாரம் அவனை கோலிக் குண்டு ஆட கூப்பிடுகிறது. அவனது வயல் தாளில் எழுதப்பட்டிருக்கும் மண்புழுக்களின் கவிதைகளை வாசிக்க மறுக்கிறார்கள். மரங்களின் காவியமாகப் பரந்து விரிந்த அவர்களின் கானகத்தில் அலட்சியத் தீ வைக்கிறார்கள். உண்மையில் விவசாயி ஒரு விஸ்வரூபன் அவன் விரல்நுனியில் சுழல்கிறது உலக உருண்டை அவனுக்கு முன் உலகில் உள்ள அனைவரும் எவ்வளவு சிறியவர்களாக இருக்கிறார்கள்!!! கவிதை – நா.வே.அருள் ஓவியம் – கார்த்திகேயன்