இடுகைகள்

நினைவுகள் அழிவதில்லை  இது  கடந்தகால கதை  எதிர்கால விதை  "மாற்றம் ஒன்றே மாறாதது" சூர்யா முதல் பிரகாஷ் ராஜ் வரை இன்று எல்லோரும் சொல்கிறார்கள்... முதலில் சொன்னவர்  காலத்தை வென்ற "காரல் மார்க்ஸ்" உண்மைதான்... தமிழ் சினிமாவும் மாறிவிட்டது  கதையுள்ள படங்கள்  விளம்பரம் இல்லாமலே வெற்றி பெறுகின்றன.... இளைஞர்கள் என்றால்... காதல் தோல்வியில் சாராய தாசர்கள் ஆகும்  தேவதாஸ்களா ? அதிகாரங்களின் அடிவருடிகளா? பொழுதுபோக்கு பொம்மைகளா? அல்லது  புரட்சியின் தூதுவர்களா? கதையில் வரும் கையூர் மக்களுக்கும்  சென்னை காவாங்கரை மக்களுக்கும்  காலம் கற்றுத்தந்த பாடங்கள் என்ன? அரசியல்... மனிதர்களின் ஆதாரமா? சேதாரமா? வெள்ளைக்காரனின் வேஷங்கள்  பண்ணையாரின் துவேஷங்கள்  படம் முழுதும் இழையோடும் பகடிகள்  அவசியமான அடிதடிகள்  நக்கல்கள் நையாண்டிகள்  சென்னைவாசிகளின் சீண்டல்கள்  வசனங்களின் சிகரங்கள்  ஒலிப்பதிவின் உயரங்கள்  மலைக்குள் மறைந்திருக்கும் சிற்பங்கள...
ஒரு முட்டாளின் இரண்டு கவிதைகள்.... (1) நீங்கள் ஆச்சரியப்பட்டாலோ  அதிர்ச்சி அடைந்தாலோ  அதற்கு நான் பொறுப்பல்ல  யாரோ சிலரின்  எடை மேடையில்  இம்மாம் பெரிய இந்தியா  விற்பனைக்கல்ல... இலவசமாய்... ******** (2) சொல்லுறதைச் சொ ல்லிப்புட்டேன்  அப்புறமும்  வரும் ஆகஸ்டு 15-க்கு  ஆரஞ்சு முட்டாய் வாங்கினா.... நீங்களே  சவைச்சுக்கலாம்...
வெள்ளைக்காரன் கையில விளக்குமாறா  இருந்தது இப்போ  கொள்ளைக்காரன் கையில செருப்பா  இருக்குது... எப்போ நம்ம கையில  வெளக்கா இருக்குமோ? வெக்கங்கெட்ட விடுதல 
காலத்திற்கும் வயதாகிவிட்டது... வயதாகி விட்டதை  கவிதை உணர்த்திவிடுகிறது! நிலவைப் பார்த்ததும்  முதன்முறையாக  இப்படித் தோன்றுகிறது.... "யாருடைய மூட்டுக் கிண்ணம்  கழன்று கிடக்கிறது?...."
புத்தாண்டு வாழ்த்துகள் சம்பிரதாயம் என் மனசுக்கு என்னவோ ஒரு மாதிரியாய் இருக்கிறது... ஆனால்...எல்லோருடனும் பிரியமாய் இருக்க யாருக்குத்தான் பிடிக்காது? இந்த புத்தாண்டுப் பரிசுகளாக சில கவிதைகள்... ஒரு சக மனிதனின் டைரிக்குறிப்புகள்  ***** உன்  உலகிற்கு நீ தரும்  உன்னத பரிசு  ரத்தம்  ***** நூலகம் திறந்துவைக்க அழைத்த நண்பனுக்கு  எப்படிச் சொல்வேன்  ஏற்கெனவே யாருமறியாமல்  இதயத்தைத் திறந்துவைத்து விட்டதை. ***** யதார்த்தம்  நம்மைவிட நன்றாகவே  யோசிக்கிறார்கள்  நம் பிள்ளைகள்  ***** உலகின் மிக நீண்ட கவிதை  பெருமூச்சு  ***** பாட்டி எழுதிய கவிதையை  ஒருமுறை கூட படித்ததில்லை தாத்தா  தினமும்  தாத்தாவின் பல்செட்டை ****** கோபுரத்தின் மீது மேகத்தின் குளிர் நிழல்  ஆசுவாசம் கொண்டன புறாக்கள்   ****** என்னைவிட உபயோகமாய் இருக்க  ஒரு காரியத்தைச் செய்துவிடவேண்டும்.... அம்மாவுக்கு ஒரு ...
பாம்புக் காதுகளும் மூளைச் சங்கும்  ஆதிபெருந்தேவன்  எதையுமே   கேட்பதில்லை   என   அடம்   பிடித்துக்கொண்டிருக்கும்   செவிட்டுச்   செவிக்கு   மொண்ணையாக   விரும்பாத   மூளை   எழுதிக்கொள்ளும்   மடல் ! செவிட்டுச் செவியே,    நான்   கத்துகிற   கத்தல்   இந்திய   தேசத்துக்கே   கேட்டாலும்   கேட்கும் .... உனக்குக்   கேட்கவில்லையா ?... கேள்விகுறி   போல்   வளைந்திருக்கும்   உனது   இரண்டு   பிம்பங்களும்   எப்போது ஊமைகளாயின  ?   உனது   இரண்டு  " காட்சிப்   பிழைகளும் "   அரசு   என்கிற   இரும்பு   எந்திர   முட்டையின்   இருபுறத்திலும்   பொருத்தப்பட்ட   அலங்கார   உறுப்புகளா ?    அல்லது   கண்கள்   மூடிக்கொண்டிருக்கும் முகத்தின்   ஆணவச்    சதைப்   பிதுங்கல்களா ?   எனில் ,  கேட்கக்   கூடாது   என்பதற்காகப்   படைக்கப்பட்டிரு...