
கவியோவியத் தொடர் ************************ யுத்த கீதங்கள் 14 / நா . வே . அருள் நுகத்தடி ************ அரசின் ஏவலாளிகள் ஒரு செங்கோல் செய்து வைத்திருக்கிறார்கள் கரடு முரடானதும் முட்டாள்தனமானதும் , மூர்க்கத் தனமானதும் உயிர் எடுக்கும் உன்மத்தம் கொண்டதுமான செங்கோலில் ராஜதந்திர முலாம் . அதில் ஒட்டியிருக்கும் பல உயிர்களின் துள்ளலும் துடிப்பும் சதைத் துணுக்குகளும் ரத்தக் கறைகளும் கூசும் பொய்களுக்கு ஒத்தடம் கொடுப்பதற்காகவே உடல் முழுதும் வளரும் உதடுகள் உண்மை எலும்பும் தோலுமாகப் பரிதாபத்துடன் காட்சியளிக்கிறது . பொய் அவ்வளவு சக்தி வாய்ந்தது அதைப் பிரயோகிக்கையில் பெருந்திரள் கூட்டம் பின்வாங்கி ஒரு பூனையைப் போல ஒடுங்கிப் போகும் . மிகச் சமீபகமாகத்தான் விவசாயிகள் மீது பிரயோகிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் . விவசாயிகளோ தங்கள் கழுத்தை அழுத்திய நுகத்தடியை பூட்டாங்கயிறு துணித்து ஆகாயம் முட்டி ஆவேசத்துடன் நிற்கிறார்கள் இப்போ...