அடைகாப்பு நிகழ வேண்டிய சந்திப்பு நிகழாதபோது நெடிய சோகம் நெஞ்சுக்குள் உனது தாய்மையின் அலகைத் தரிசிக்க ஒவ்வொரு தோப்பாய் அலைந்துகொண்டிருந்தேன் நீயோ நாம் முதலில் சந்தித்த இலுப்பை மரக் கிளையில் குரல் விசிறிப் போயிருக்கிறாய் வனத்தின் தாய்மொழி வாய்த்தும் குஞ்சினைக் காக்க கோழியாய் மாறும் உன் குசலமும் சிறகடிப்பும் உனது றெக்கையின் அடியாழத்தில் உணர்ந்த உள்ளங்கைச் சூட்டின் அதே கதகதப்பு உனது அணைப்பிற்காக முட்டைக்குள் கிடக்கிறேன் முழி திறவாமல்..... வனந்தேடி வருவாயா? ************************************* ** அண்ணன் கல்யாண்ஜி சென்னைக்கு வந்தும் சந்திக்க முடியாத நிமித்தத்தில்.....
இடுகைகள்
நவம்பர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பொதுவாகவே ஒவ்வொருவரின் கவிதை ரசனையும் அவர் சார்ந்த பல்வேறு காரணிகளுடன் இணைந்ததுதான். ....... சுகுமாரனின் பயணத்தின் சங்கீதங்கள் படித்திருக்கிறேன். இன்று அதிகாலையில் அவருடைய "நீருக்குக் கதவுகள் இல்லை" தொகுப்பின் இரண்டாவது கவிதை 'பலிக்கோழை' -யைப் படிக்க நேர்ந்தது. இன்றைய காலச் சூழலில் - கவிதையின் இருப்பு குறித்த சிந்தனையே கேள்விக்குறி ஆகிவிட்டதாகக் கருத இடமுள்ள சந்தையில் - இந்தக் கவிதை என்னை உலுக்கி விட்டது. கவிதைக்காகவே வாழ்கிறவர்களுக்கு கவிதையின் இந்த மாயம் சாத்தியம்தான் என்பதைப் புரிந்துகொண்டேன். இப்படி வாழ்நாளில் ஏதேனும் ஒரு கவிதை எழுதிவிட்டாலும் இலக்கியத் திருப்தி கொள்ளலாம். நிற்க. ஜனநாயகத்தை நிலை நாட்ட வேண்டுமெனில் ஓவ்வொருவனும் தன் மனதிலிருந்து சர்வாதிகாரத்தைக் கழற்றி எறிய வேண்டும். தீண்டாமையும், சாதியும் ஒழிய வேண்டுமெனில் தலித்துகள் தமது உரிமைகளுக்காகப் போராடுகிற அதே நேரத்தில் பிறந்து விட்ட காரணத்தால் ஆதிக்கச் சாதியைச் சார்ந்தவர்களில் மனசாட்சி உள்ளவர்கள் எல்லாம் தலித்துகளுடன் இணைந்து சாதி ஒழிப்புக்குப் போராட வேண்டும். தர்ம...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
எங்கே பார்க்கிறாய் செல்லம்மா என்ன வேணுமடி கண்ணம்மா பொங்கும் அழகி செல்லம்மா - கறும் பூ ரெண்டு உனது கண்ணம்மா மின்னும் அழகில் நீயம்மா - நீ மேனி பூத்த பூவம்மா கண்ணில் பாயும் தேனம்மா - உனைக் கண்டால் பசி ஏதம்மா வானம் உனக்கு வேணுமா - அந்த நிலவில் படுக்கை போதுமா? மௌனம் உனக்கு ஏனம்மா - தமிழ் மொழியில் நீயும் பாடம்மா தர்மபுரியில் அதர்மமா - அங்கே தலித்து வாழ்க்கை தகனமா மர்ம வாழ்க்கை மாறுமா - சாதி மறைந்து மண்ணில் போகுமா யாரைக் கேட்க?...சொல்லம்மா - ஒரு பதிலைச் சொல்லு செல்லம்மா ஊரு சேரி ஒண்ணம்மா - இந்த உலகத்துக்குச் சொல்லம்மா navearul@gmail.com
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
அசுரன் தாழிட்டு வீட்டில் பதிரமாகிவிடுகிற இருள் நேரத்தில் எங்கோ ஓர் இருள் மலைக்குள் இரையைப் பிய்த்துப் பிராண்டி விழுங்கும் பேய் விலங்கொன்று. *** புசிக்கப்பட்டுத் துப்பப்பட்டு நிராதரவான பெண் ஒருத்தியின் சுருண்டு கிடக்கும் உள்ளாடைமேல் இழையாய்ப் பொசியும் அவள் கூந்தலிலிருந்து உதிர்ந்த ஓரிழை மயிர். *** காற்றில் ஓய்ந்து உறைய மறுக்கும் கதறல்களும் கன்னத்தில் காய்ந்து உலர்ந்த கண்ணீர்த் துளிகளும் செய்யும் கெக்கெலி யில் வெட்கி மரவட்டையாய்ச் சுருளும் என் கவிதை. *** இந்த க்ஷணத்தில் என்னைச் சிலை வடித்தால் விகாரமான உருவமாவேன் கோரைப் பற்கள் முளைக்கும் கைகளில் ஆயுதங்...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
மிதக்கும் சொர்க்கம் காற்றுக் கடலின் கட்டுமரமே! உன் அலகாக அல்ல சிறகாக இருக்கவே பிரியப்படுகிறேன் வயிறு வளர்க்க அல்ல வானம் அளக்கும் வற்றாத ஆசையில்..... ************* என்ன தான் இந்த மனிதன் பீற்றிக் கொண்டாலும் அவனின் இருப்பு நிழலில் உனதோ .... கிளையில்! ************* இரவு எத்துணை அழகாய் இருந்தென்ன? உன் சிறகு வருடாத காற்று... சீசீ.... ************* இந்த மனிதன் விசித்திரமானவன் தான் லேகியத்துக்கு அலைபவன் சிட்டுக்குருவியைத் தொலைத்துவிட்டான்! -- நா.வே.அருள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பொதுஜனத்தின் மீது எனக்குப் புகார் இல்லை ஆதி பெருந்தேவன் அன்புள்ள பொதுஜனத்திற்கு ஒரு வழிப்போக்கன் எழுதிக்கொள்ளும் மனம் திறந்த மடல். மறக்க முடியுமா? பாலு மகேந்திராவின் "மூன்றாம் பிறை" ஞாபகத்திற்கு வருகிறது. பழைய நினைவுகள் எல்லாவற்றையும் மறந்துபோன ஸ்ரீதேவிக்கு கமலஹாசன் ஒரு கதைப்பாட்டு பாடிக் காண்பிப்பார்: நீல நரியின் கதை.. நரியும் வெளியே வந்தது...மழையில் கொஞ்சம் நனைந்தது...நீலச் சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும் டும்..ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு டும் டும் டும் டும்....டும் டும் டும் டும்.. இப்போதெல்லாம் நரியின் சாயம் கலைய வாய்ப்பில்லை. நரிகள் குடை பிடிக்கக் கற்றுக்கொண்டன. நிதின் கத்காரியைக் கேளுங்கள், நிச்சயம் சொல்வார். அவர் ஒரு குடைத் தொழிற்சாலையே வைத்திருக்கக்கூடும். ஆம் என்றொரு அசரீரி கேட்கிறது அத்வானியின் குரலில். சும்மாங்காட்டியும் என்று ஒரு குரல் வருகிறது...அது சுஷ்மா சுவராஜினுடையது. அரசியல் வியாபாரிகள் அரசியல் செய்யவந்தவர்கள் வியாபாரம் செய்ததும் வியாபாரம் செய்ய வந்தவர்கள் அரசியல் செய்ததும் நம் ...