புத்தாண்டு வாழ்த்துகள் சம்பிரதாயம் என் மனசுக்கு என்னவோ ஒரு மாதிரியாய் இருக்கிறது... ஆனால்...எல்லோருடனும் பிரியமாய் இருக்க யாருக்குத்தான் பிடிக்காது? இந்த புத்தாண்டுப் பரிசுகளாக சில கவிதைகள்... ஒரு சக மனிதனின் டைரிக்குறிப்புகள் ***** உன் உலகிற்கு நீ தரும் உன்னத பரிசு ரத்தம் ***** நூலகம் திறந்துவைக்க அழைத்த நண்பனுக்கு எப்படிச் சொல்வேன் ஏற்கெனவே யாருமறியாமல் இதயத்தைத் திறந்துவைத்து விட்டதை. ***** யதார்த்தம் நம்மைவிட நன்றாகவே யோசிக்கிறார்கள் நம் பிள்ளைகள் ***** உலகின் மிக நீண்ட கவிதை பெருமூச்சு ***** பாட்டி எழுதிய கவிதையை ஒருமுறை கூட படித்ததில்லை தாத்தா தினமும் தாத்தாவின் பல்செட்டை ****** கோபுரத்தின் மீது மேகத்தின் குளிர் நிழல் ஆசுவாசம் கொண்டன புறாக்கள் ****** என்னைவிட உபயோகமாய் இருக்க ஒரு காரியத்தைச் செய்துவிடவேண்டும்.... அம்மாவுக்கு ஒரு ...
இடுகைகள்
2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பாம்புக் காதுகளும் மூளைச் சங்கும் ஆதிபெருந்தேவன் எதையுமே கேட்பதில்லை என அடம் பிடித்துக்கொண்டிருக்கும் செவிட்டுச் செவிக்கு மொண்ணையாக விரும்பாத மூளை எழுதிக்கொள்ளும் மடல் ! செவிட்டுச் செவியே, நான் கத்துகிற கத்தல் இந்திய தேசத்துக்கே கேட்டாலும் கேட்கும் .... உனக்குக் கேட்கவில்லையா ?... கேள்விகுறி போல் வளைந்திருக்கும் உனது இரண்டு பிம்பங்களும் எப்போது ஊமைகளாயின ? உனது இரண்டு " காட்சிப் பிழைகளும் " அரசு என்கிற இரும்பு எந்திர முட்டையின் இருபுறத்திலும் பொருத்தப்பட்ட அலங்கார உறுப்புகளா ? அல்லது கண்கள் மூடிக்கொண்டிருக்கும் முகத்தின் ஆணவச் சதைப் பிதுங்கல்களா ? எனில் , கேட்கக் கூடாது என்பதற்காகப் படைக்கப்பட்டிரு...