இடுகைகள்

படம்
    கவிதை ஒரு கைவல்லியம் ********************************* 1 கவிதையென்பது ஒரு நாடோடித் தவம். கவிதையை வீட்டுக் காவலில் வைக்க முடியாது.   சிறையாகுமெனில் கவிதை வீட்டையே நிராகரித்து வெளியேறிவிடும்.   வழக்கமான வாசல் வழிதான் என்றில்லை அது காற்றைப்போல சாளரத்தின் வழியாகவும் நுழையும் நூதனம்   கவிதையென்பது கதவுகளைக் கூட வெறுக்கும் கட்டற்ற நுழைவு.   கவிதைக்குப் பிடித்தது தென்னங்கீற்றில் கூடு கட்டும் நிலவின் சாளரத் தொங்கல் மட்டுமல்ல சாக்கடையில் விழுந்து கிடக்கும் நிலவின் பின்வாசல் பிம்பமும்தான்.   எப்போதும் திறந்திருக்கும் வீட்டைத்தான் அது விரும்புகிறது.   பூட்டியிருக்கும் வீட்டினைத் திறந்துவிடுகிற மந்திரக் கைகள் கவிதைக்கு உண்டு.           2 கவிதையின் இன்னொரு பிரத்தியேகம் அசாத்தியமானது.   கவிதை தனக்குள் ஒரு வாசனை உலகத்தை வைத்திருக்கிறது.   அது வார்த்தைகளில் ஓவியத்தில் காகிதப் பூக்களிலென வாசத்தை நுகரவைத்துவிடுகிறது. ...
படம்
  சொந்த சகோதரர் *************************** நா,வே.அருள் எத்தனையாவது முறை என்று தெரியவில்லை அவர்கள் இன்னுமொரு முறை அம்பேத்கரைக் கொன்றுவிட்டார்கள்.   ஒவ்வொரு முறையும் துள்ளத் துடிக்கத்தான் கொல்கிறார்கள்.   ஆனால் எவ்வளவு கொடூரமான கொலையையும் அவ்வளவு மிருதுவான வார்த்தைகளால் வருணிக்கத் தெரிந்தவர்கள்.   எத்துணைதான் அநீதியாக இருந்தாலும் நியாயங் கற்பித்துவிடுகிற ஆயுதத் தராசு முள் அவர்களிடமிருக்கிறது.   இத்தனைக்கும் கொன்றவர்களின் தாய்மார்கள் அம்பேத்கரின் சகோதரிகள்தாம்.   சகோதரிகளுக்கும் சேர்த்துத்தான் அவர் சாத்தான்களிடமிருந்து சட்டப் புத்தகத்தைப் பிடுங்கிவந்தார்.   அந்தச் சட்டப் புத்தகத்தின் பக்கங்களைக் கிழித்துத்தான் இந்த முறையும் அம்பேத்கரை எரித்திருக்கிறார்கள்.   கொன்றவனும் கொல்லப்பட்டவனும் ஒரே தோட்டத்து இரண்டு பூக்கள்தாம். ஒரு மலரைப் பூஜையறைக்கும் ஒரு மலரை தகனமேடைக்கும் அனுப்பியவன் எதுவுமே நடக்காதது போல இளைப்பாறியபடியே தொலைவில் இருக்கிறத் தோட்டக்காரன்!   09.04.2021 இரவு 9...

விடுதலை - நா.வே.அருள்

விடுதலை - நா.வே.அருள்

கவிதை உலா 6 - நா.வே.அருள்

கவிதை உலா 6 - நா.வே.அருள்

கவிதைச் சந்நதம் 16 – நா.வே.அருள்

கவிதைச் சந்நதம் 16 – நா.வே.அருள்

உலகிலேயே சிறந்த கவிதை - நா.வே.அருள்

உலகிலேயே சிறந்த கவிதை - நா.வே.அருள்
படம்
  பேரணி *********** தலைநகரை நோக்கிய லட்சம் கோடி உழவர்களுடன் எனது கவிதைகளும் பயணிக்கின்றன ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை எனது கவிதைகள் மறியல் நடத்தும் எனது கவிதைகளுக்குப் போராட்டங்களும் புதிதல்ல. வெள்ளைத்தாளில் எழுதுகோல் முனையால் கீறி உழுகிறபோதும் கணினித் தொடுதிரையில் மின்னம்பை நகர்த்துகிறபோதும் கண்ணில் படுவதோ கலப்பை நுனி. மாடுகள் இல்லாதபோது கணவனும் மனைவியுமே கலப்பையை இழுப்பது மாதிரி தன்னந்தனியாகக் கவிதையை இழுத்துவருகிறேன். விலை கட்டுப்படியாகாதபோதும் ஓர் உழவனைப்போல வார்த்தை விதைகளைத் தூவுகிறேன். எனது கறுப்பெழுத்துகளின் உமி நீக்கிப்பார்த்தால் அரசியல் அரிசிகள் முகங்காட்டும். உழவனின் கிணற்றைப்போலவே வற்றிப்போய்க் கிடக்கும் எனது வாழ்க்கையும். உழவனைப் போலத்தான் அடக்கவிலையை நிர்ணயிப்பதில் எனது கவிதைப் பயிர்களுக்கும் கட்டுப்படியில்லை. ஒரு புயலுக்குப்பின் வயலிழந்துபோன உழவனைப்போல இலக்கியப் புயல்களால் நானும் வலுவிழந்து போய்விடுகிறேன். விவசாயிகளுடையதைப் போலவே எனது கவிதை நிலமும் காய்ந்துகிடக்கிறது. இலக்கியத்திலும் விருது நிவாரண நிதிகள் விலை பேசப்படுகின்றன. சமூக பயங்கரவாதத்தால் உழவர்களின் தற்கொலை...