அநாதைகள் வார்த்தைகளை ஸ்வீகரித்துக்கொள்ளத் தயாரில்லை மேலும் கவளம் கவளமாய் விழுங்கிக் களைப்படைந்துவிட்டன காதுகள் அதுவும் நடிப்புச் சுதேசிகளின் நாடக வார்த்தைகள்!!.... =நா. வே. அருள்
இடுகைகள்
மே, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பூமி அம்பேத்கர் அண்ணலுக்கு - சாதி அநியாயம் நடந்த கதை இம்மண்ணில் கண்ணீரே - வடிஞ்சி இல்லாமல் போன கதை வெளையாட்டு பருவத்துல - அண்ணனோட வெளியூரு போகையிலே துளியூண்டு தண்ணி இல்லே - கட்டு சோறு தின்ன வழியுமில்ல ஒழக்குத் தண்ணீரை - அங்க ஒரு பயலும் கொடுக்கவில்ல கிழக்குச் சூரியனை - எந்தக் கிணறும் ஏற்கவில்ல நாய்குடிக்கத் தண்ணீரை -ஒரு நாலு அண்டா வச்சவனோ தீப்பிடிச்ச நாக்கால - அவரைத் துரத்தி அடிச்சுப்புட்டான் குட்டையில குடிப்பதற்கு - தண்ணி குவிஞ்ச கையில் எடுக்கையிலே வெட்டை மிதந்து வரும் - பத்து வெரலுக்கும் வாந்தி வரும் பள்ளியில சமமாக - வகுப்பில் பக்கத்துல குந்...