ஆப்பிளுக்குள் ஓடும் ரயிலும் ஆதார் அட்டையும் சமீபத்தில் "ஆப்பிளுக்குள் ஓடும் ரயில்" என்கிற தனது கவிதைத் தொகுப்புக்கான முன்னுரையில் நண்பர் அய்யப்ப மாதவன் இப்படிக் குறிப்பிடுவார்.... """""ஒரு கவிஞன் காதலைத்தான் பாடவேண்டுமா என்றால் ஆம் என்றுதான் சொல்லவேண்டும். வேறு எதைப்பற்றியும் பாடும் காலங்களில்லை என்றே கூற வேண்டும். ஒரு எழுச்சியும் இல்லை, புரட்சியும் இல்லை. எழுத்தாளனுக்கு அதிகாரமுமில்லை. அங்கீகாரமும் இல்லை. அடக்குமுறை வடிவமாக எப்பவுமே இங்கிருக்கிற அரசுகள் தோன்றியவண் ணமிருக்கின்றன. பொய் பொய்யாய் பேசிவிட்டு அரசை ஆள்கிறார்கள். மக்களின் மீதே எல்லாச் சுமைகளையும் திணிக்கிறார்கள்....ஒட்டுமொத்த மக்களும் விழிப்புணர்ச்சி அடையாதவரை நாம் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருப்போம். ஒருவேளை உண்மையில் நம் மக்கள் அவர்களுக்கு எதிரான அநீதிகளுக்கும் அக்கிரமங்களுக்கும் அநியாயங்களுக்கும் கூட்டாகக் குரல் கொடுத்துப் பெரும் புரட்சியை ஏற்படுத்துவார்கள் எனில் அப்போதுதான் கவிஞனுக்கான மகத்தான காலம் உருவாகிவிடும். அப்போது கவிஞன் காதல...
இடுகைகள்
ஜனவரி, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது